முறையான குடிநீர் விநியோகம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் தீத்திபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகர், காளம்பாளையம் ஒருங்கிணைந்த காலனிகள் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறு நீர் வழங்கப்படுவதில்லை. இது குறித்து தீத்திபாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பலமுறை  முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 



எனவே, முறையான குடிநீர் விநியோகம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...