டிடிவி தினகரன்தான் உண்மையான துரோகி - பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து, தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :-  யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது. பிரிந்த இயக்கம் ஒன்றிணைந்த வரலாறு இல்லை, ஆனால் நாம் இணைந்துள்ளோம். பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

நம்மை விமர்சிக்க தினகரனுக்கு தகுதி இல்லை. உண்மையில் தினகரன் தான் துரோகி. தினகரனை கட்சியை விட்டு நீக்கி வைத்தவர் ஜெயலலிதா. 1000 தினகரன் வந்தாலும் கட்சி, ஆட்சியை அசைக்க முடியாது. அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தினகரன் எங்களை எப்படி நீக்க முடியும். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள் தான்.

தமிழகத்தில், 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தது அதிமுகதான். இதற்கான பெருமை ஜெயலலிதாவை சேரும். ஜெயலலிதா இல்லாத நிலையில், ஒன்றிணைந்த நம்மை யாராலும் பிரிக்க முடியாது. எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். திமுக தலைவராக கூட முடியாத ஸ்டாலினால் எப்படி முதலமைச்சராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...