டிடிவி தினகரன்தான் உண்மையான துரோகி - பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து, தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :-  யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது. பிரிந்த இயக்கம் ஒன்றிணைந்த வரலாறு இல்லை, ஆனால் நாம் இணைந்துள்ளோம். பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

நம்மை விமர்சிக்க தினகரனுக்கு தகுதி இல்லை. உண்மையில் தினகரன் தான் துரோகி. தினகரனை கட்சியை விட்டு நீக்கி வைத்தவர் ஜெயலலிதா. 1000 தினகரன் வந்தாலும் கட்சி, ஆட்சியை அசைக்க முடியாது. அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தினகரன் எங்களை எப்படி நீக்க முடியும். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள் தான்.

தமிழகத்தில், 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தது அதிமுகதான். இதற்கான பெருமை ஜெயலலிதாவை சேரும். ஜெயலலிதா இல்லாத நிலையில், ஒன்றிணைந்த நம்மை யாராலும் பிரிக்க முடியாது. எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். திமுக தலைவராக கூட முடியாத ஸ்டாலினால் எப்படி முதலமைச்சராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...