பள்ளி சென்ற சிறுமிகள் மாயம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்


கோவை துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் வழக்கம் போல இன்று வாடகை காரில் பள்ளிக்கு சென்றனர். கார் ஓட்டுனர் பள்ளி வாயிலில் சிறுமிகளை இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. 



ஆனால், இரு சிறுமிகளும் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 



புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாயமான சிறுமி பள்ளி சீறுடையை தவிர மாற்று உடையும் கொண்டு வந்ததாக தெரிகிறது. 



இதைத் தொடர்ந்து, சிறுமிகள் இருவரும் பள்ளிக்கு விடுமுறை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் அருகில் உள்ள வணிக வளாகங்களில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். 



இந்த நிலையில், மாயமான சிறுமிகளின் பெற்றோர், பள்ளிக்கு சென்று சிறுமி மாயமானது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், தங்கள் குழந்தைகள் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி பள்ளி வாயில் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். 

பள்ளிக்கு சென்ற இரு சிறுமிகள் மாயமான சம்பவம் கோவையில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...