கண்ணாடி கருவிகள் தயாரிப்பு இலவச பயிற்சி - ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையை சேர்ந்த அரசினர் அறிவியல் கண்ணாடி கருவிகள் பயிற்சி நிலையம், அறிவியல் கண்ணாடி கருவிகள் தயாரிப்பதில் 2 மாதம் மற்றும்  11 மாதம் திறன் மேம்பாடு பயிற்சி படிப்புகளை துவங்க உள்ளது. இப்பயிற்சி நிலையம் அவினாசி சாலை சிட்ரா அருகில் மண்டல சோதனை ஆய்வுக் கூட வளாகத்தில் உள்ளது. 

11 மாத பயிற்சியில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 01.09.2017 அன்று முதல் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 3 ஆண்டுகள் தளர்த்தப்படும். 11 மாத பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இரண்டு மாத குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 மாத பயிற்சிக்கு வயது உச்ச வரம்பு மற்றும் உதவித் தொகை கிடையாது. தொழிற்சாலைகள் மூலம் பரிந்துரைக்கப்படும் பணியாட்களும் 2 மாத பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி பெறுவோருக்கு விடுதி வசதிகள் கிடையாது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கண்காணிப்பாளர், அரசினர் அறிவியல் கண்ணாடி கருவிகள் பயிற்சி நிலையம், விமான நிலையம் அஞ்சல், கோயம்புத்தூர் -641014 என்ற பெயரில் 01.09.2017-க்குப்பின் தேதியிட்ட ரூ.10-க்கு குறுக்கு கோடிட்ட அஞ்சல் ஆணையுடன் ரூ.5-க்கு அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட 10 x 23 செ.மீ. உறையுடன் இணைத்து அனுப்பி விண்ணப்ப படிவத்தினை உரிய இணைப்புகளுடன் மேற்கண்ட முகவரிக்கு 27.09.2017 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற பின்வரும் அலைபேசிகளில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 9698449372, 9789902171, 9444166766, 9842559335

ஆர்வமுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து படித்து பயன் பெற முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...