டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி மரணமடைந்ததால் ஆத்திரம்: சுகாதாரமற்ற கழிவறையை இடிக்க திரண்ட பொதுமக்களால் பதற்றம்

டெங்குக் காய்ச்சலை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிகிச்சை பலனின்றி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை கணபதியை சேர்ந்த காதார் பாட்ஷா என்பவரது மகள் தாஜ் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில்,  சிறுமியின் வீட்டின் அருகே உள்ள பொது கழிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாலும், மழை நீர் தேங்கியே இருப்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி அதனாலேயே சிறுமி உயிரிழந்திருப்பதாக கணபதி பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சிறுமி பலியானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரமற்ற முறையில் கிடந்த, கழிவறையை இடிக்க முயன்றனர்.



இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திரண்டிருந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒரு வார காலத்திற்குள் சுகாதாரமின்றியும், யாரும் உபயோகப்படுத்தாமல் இருக்கும் கழிவறையை இடித்து அகற்றுவதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் கணபதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் டெங்கு பீதி சற்றே ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள், டெங்குவை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...