ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு முறையாக மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கூறுகையில், மாத ஊதியம் 1-ம் தேதி முதல் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஓட்டுநருக்கு அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் மற்றும் கிளீனருக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியமாக உயர்த்தித் தர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அறிவித்த சதவிகிதப்படி இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும், பணியாளர் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் மற்றும் கிளினருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பணிக்கு திரும்பும்வரை ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



முன்னதாக, இந்த முற்றுகைப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...