ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு முறையாக மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கூறுகையில், மாத ஊதியம் 1-ம் தேதி முதல் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஓட்டுநருக்கு அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் மற்றும் கிளீனருக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியமாக உயர்த்தித் தர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அறிவித்த சதவிகிதப்படி இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும், பணியாளர் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் மற்றும் கிளினருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பணிக்கு திரும்பும்வரை ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



முன்னதாக, இந்த முற்றுகைப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...