அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது எனக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் காவல் ஆணையரிடம் மனு

மதச்சார்பின்மையை உறுதி செய்யும் விதமாக அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடக்கூடாது என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். 

இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் புறநகர மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நமது நாடு மதச்சார்பற்றது என்று நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புறையே கூறுகிறது. மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை, பொதுத்துறை வளாகங்களில் மத விழாக்களும், பூஜைகளும் சமீபகாலமாக அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய காலகட்டங்களில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இது போன்ற மத விழாக்கள் கொண்டாடக்கூடாது என்று உத்தரவிட்டபோதும் தொடர்ந்து மத விழாக்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மத வழிபாடுகள் நடத்தக் கூடாது. உங்கள் துறை அலுவலகங்களில் இது போன்ற மத வழிபாடுகளை கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.



இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...