கோவையில் அழிந்து வரும் காட்டன் ஆலைகளை நினைவுப்படுத்தும் 5 நட்சத்திர ஹோட்டல்!



தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பருத்தியின் அழகை தற்போது காண முடிவதில்லை. பஞ்சாலைகள், நெசவாலைகளை கோவை மக்கள் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில், கொங்கு நகரமான கோவை மக்களின் இனிமையான பழைய நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஐடிசியின் வெல்கம்ஹோட்டல் சார்பில் ஆடைகள் தயாரிக்கப்படும் தரிகள், நூல் கெண்டைகளைப் போன்ற வடிவமைப்புளுடன் கூடிய 5 ஸ்டார் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகளுடன் கூடிய பார் வசதி இடம்பெற்றிருக்கும்.



அதுபோல, ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெல்கம் கஃபேவின் கோவை 5 நட்சத்திர ஹோட்டலிலும் பார் வசதியுண்டு. ஆனால், இது குடிமகன்கள் எதிர்பார்க்கும் மதுபாட்டில்கள் அடங்கிய பார் அல்ல. இங்கு, கொங்கு மண்ணின் பெருமையை உணர்த்தும் வகையிலான காட்டன் (பஞ்சு) பார் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் பருத்தி பந்து மாதிரியான வடிவத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.



வெல்கம் கஃபேவின் கோவை 5 நட்சத்திர ஹோட்டலின் உணவு வகைகளும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இனிப்புடன் தொடங்கும் உணவு முறையில், மாங்காய் மீன் குழம்பு, கீமா உருண்டை குழம்பு, பருப்பு ரசம், சேனை கிழங்கு வறுவல், அரைத்து வைக்கப்பட்ட மட்டன் குழம்பு, சின்னவெங்காய மட்டன் சுக்கா போன்ற உணவுகள் அந்த ஹோட்டலின் அடையாளமாக உள்ளது.



இதைத்தொடர்ந்து, இந்த ஹோட்டலில் மொத்தம் 103 அறைகள் உள்ளன. திருமணம், விருந்து, ஆலோசனைக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக குறைந்தபட்சம் 200 பேர் அமரும் வகையிலான அரங்கு கட்டப்பட்டுள்ளது. மேலும், 5-வது மாடியில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குளிப்பதற்காக 3,6 அடி ஆழத்தில் நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.



கடந்த 1-ம் தேதி முதல் வெல்கம்ஹோட்டல் கோவை 5 நட்சத்திர ஹோட்டல் வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத இறுதி வரையில், பார் வசதியை இணைக்க முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...