"கோவையில் ஆண் மலட்டுத் தன்மை அதிகரித்து வருகிறது, கவலைக்குறியது"


கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் அதிகரித்து வரும் உடல்நிலைக் குறைபாடுகளில் ஒன்று ஆண்களிடையே உள்ள மலட்டுத் தன்மை ஆகும். இது பெரும்பாலும், 29 முதல் 35 வயதினரிடையே அதிகளவில் காணப்படுவதாக நோவா ஐவிஐ கருத்தரிப்பு நிபுணர் மருத்துவர் மீனாட்சி தெரிவித்தார்.

இதுகுறித்து கோவை நோவா ஐவிஐ கருத்தரிப்பு நிபுணர் மருத்துவர் மீனாட்சி மேலும் கூறியதாவது:-



“கோவையில் தற்போது ஆண்மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் 29 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களிடம் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. ஆண் மலட்டுத்தன்மை பரம்பரை அடிப்படையில்வரக் கூடும். தொற்று, விதைப்பையில் காயம் உள்ளிட்ட சில மருத்துவக் காரணங்களாலும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும்.

வயது, ஊட்டச்சத்து குறைபாடு, முறையான உடற்பயிற்சி இன்மை, வேலை பளு மற்றும் மன அழுத்தம், சுற்றுச் சூழல் பாதிப்பால் ஏற்படும் தாக்கம் போன்ற வாழ்க்கை முறை காரணங்களும் ஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்படக் காரணமாக அமைகின்றன.

புகைபிடிக்கும் பழக்கம், சட்ட விரோத போதை மருந்து பயன்பாடு, மதுப்பழக்கம், உடல் பருமன், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) உள்ளிட்டவையும் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

தற்போது மருத்துவ ஆய்வு முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் சிறிய காரணிகள் கூட தெளிவாக கண்டறியப்படுகிறது. இது முன்பு சாத்தியம் இல்லாமல் இருந்தது. பெண்ணை மட்டுமே நிரந்தரமாக குறை கூறாமல் பாதிப்பு உள்ள சரியான நபருக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த பரிசோதனை முறைகள் உதவுகின்றன.

மலட்டுத் தன்மை மற்றும் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகள் சரியான உதவியை நாடவேண்டியது அவசியம்” என்றார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...