தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் மகசூல் அதிகரிக்கும்


கோவை, நவம்பர் 6: தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர் மகசூல் அதிகரிக்கும் என்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, பூச்சியியல் துறை பேராசியர் முனைவர் மா.இரா. ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.



கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் வறட்சி மற்றும் குறைவான பயிர் மகசூல் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.



இதுக்குறித்து  முனைவர். ஸ்ரீநிவாசன் கூறுகையில், “தேனீ வளர்ப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இயற்கை வழி விவசாயம் தான். தேனீ வளர்ப்பு என்பது இயற்கை விவசாயத்தின் ஓர் அங்கம்.



தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டால் பயிர் மகசூல் அதிகரிக்கும். பெட்டிகளில் வளர்க்கப்படும் தேனீக்கள் விவசாய நிலங்களில் ஏக்கருக்கு 5 பெட்டி என வைத்துவிட்டால் போதும். ஒரு பெட்டியில் மூன்றாயிரம் தேனீக்கள் வரை வளரும்.தேனீக்கள் மகரந்த சேர்க்கையை பயிர்களிடையே உற்பத்தி செய்துவிடும் இதனால் பயிர்கள் அதிக மகசூல் தரும் .,” என்றார்.

மேலும் ஆப்பீள், பீச், பேரிக்காய், எலுமிச்சை, மா போன்ற பழ வகைகளிலும் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, கொத்தமல்லி போன்ற காய்கறி வகைகளிலும்  தேனீக்களால் அதிக மகசூல் பெறமுடியும் என்றார் அவர்.

சமீப காலமாக தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த இளைஞர்கள் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனீ வளர்ப்பில் எளிதாக ஆண்டுக்கு சுமார் நான்கு லட்சம் வரை சாம்பாதிக்கலாம் என்பதே இதற்கு காரணம்.



தேனீ வளர்ப்பில் ஈடுபட கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, பூச்சியியல் துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் பிரதி வாரம் 6-ம் தேதி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக நுழைவு கட்டணமாக ரூபாய் 25௦ ஒரு நபருக்கு வசூலிக்கப்படுகிறது.

இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், பயிற்சி வகுப்புகளில் தேனீ வளர்ப்பு குறித்து பாடம் மற்றும் செயல்முறை பாடம் நடத்தப்படும். பயிற்சி வகுப்பு வருபவர்களின் ஆர்வம் தூண்டப்படும் என்றார்.



இந்திய தேனீக்களை வளர்க்க ஒரு பெட்டிக்கு சுமார் 2 ஆயிரம் செலவாகும், இந்த தேனீக்கள் மூலம் வருடத்திற்கு 1௦ கிலோ வரை தேன் எடுக்கமுடியும். அதுவே இத்தாலி தேனீக்கள் வளர்த்தால் வருடத்திற்கு 2௦ கிலோ தேன் எடுக்கமுடியும் இந்த வகை தேனீக்கள் வளர்க்க ஒரு பெட்டிக்கு ரூபாய் 5 ஆயிரம் செலவாகம்.

“ஒரு நபரால் எளிதில் 1௦ பெட்டிகள் வரை தேனீக்கள் வளர்க்க முடியும். ஒரு முறை 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1௦௦ பெட்டி தேனீக்கள் வளர்த்தால்  வருடா  வருடம் அதன் மூலம் நான்கு லட்சம் வரை லாபம் சம்பாதிக்க முடியும். தேன் மட்டுமல்லாது தேன் மெழுகு, ராயல் ஜெல்லி போன்றவையும் நாம் விற்க முடியும்  இதிலும் அதிக லாபம் கிடைக்கும் எனவே தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது” என முனைவர். ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...