ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல நிர்பந்திப்பதை கண்டித்து அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 13: 

ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல வலியுறுத்தும் செஞ்சிலுவைச்சங்க நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்போரை அவரவர் வீட்டிற்கு கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி சேவை செயல்பட்டு வருகிறது. இந்த அமரர் ஊர்தி சேவையை செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. 

சமீபகாலமாக அரசின் அமரர் ஊரிதியில் ஒரே நேரத்தில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்வதாக புகார் எழுந்தது. இந்த சூழலில் மாவட்ட திட்ட உதவியாளர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் நிர்பந்தத்தினால் தான் இது போன்ற அவலம் ஏற்படுகிறது என்றும், முறையான ஊதியம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறி அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று காலை கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அமரர் ஊர்தி ஓட்டுனர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவையில் 10 அமரர் ஊர்திகள் உள்ளன. ஆனால், 2 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிக அளவில் பிரேதங்கள் வரும்போது அவற்றை மொத்தமாக அரசு வாகனத்தில் ஏற்றி அனுப்புகின்றனர். இதனால், ஓட்டுனர்களுக்கும் பிரேதத்தின் உறவினர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலமுறை அவர்களால் ஓட்டுனர்கள் தாக்கப்படுகின்றனர்.

அதோடு, 525 ரூபாய் ஊதியம் தருவதாக கூறிவிட்டு தற்போது வெறும் 215 ரூபாய் மட்டுமே ஊதியமாக கொடுக்கின்றனர். பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வரும் செஞ்சிலுவை சங்க நிர்வாகம் ஓட்டுனர்களின் உழைப்பை திருடுகின்றது. இதைத்தடுக்க வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்ப்பார்த்திருக்கிறோம்.



இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...