காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் 1,242 போலீசார் பங்கேற்பு


கோவை, நவம்பர் 18: மேற்குமண்டல காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீர்ப்பு முகாமில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த 1,242 போலீசார் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி டி.ஜி.பி.யிடம் அளித்தனர்.



மனுக்களில், இடமாறுதல், பதவி உயர்வு, வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த குறைதீர்ப்பு முகாமிற்கு கோவையில் இருந்து மட்டும் 510 போலீசார் கலந்து கொண்டனர். மேலும், திருப்பூரில் இருந்து 210 பேரும், நீலகிரியில் இருந்து 110 காவலர்களும் கலந்து கொண்டு மனு அளித்தனர்.



மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. ராஜேந்திந்திரன் தெரிவித்தார்.



இந்த முகாமில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் மேற்குமண்டல காவல்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...