பார்கிங் வசதியில்லாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்; மல்டிலெவல் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த கோரிக்கை

கோவை, நவம்பர் 2௦

கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்த பொதுமான இட வசதியில்லாத காரணத்தினால் பொதுமக்கள் அவதி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டிலெவல் பார்க்கிங் வசதி திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.



கோவை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என சுமார் 15 லட்சம் வாகனங்கள் கோவை மாநகரின் பிரதான சாலைகளான காந்திபுரம், டவுன்ஹல், உக்கடம், ரயில்நிலையம் போன்ற பகுதிகளில் இயங்குகின்றன. மேலும், ஆண்டுதோறும் புதிதாக 1.5 லட்சம் வாகனங்கள் கோவை மாநகரில் பதிவு செய்யப்படுகின்றன. 



வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. கோவை மாநகர பேருந்து நிலையங்கள், ரயில்நிலையம், வணிக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உணவு விடுதிகள், மருத்துவமனைகள் என வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி சென்று விடுகின்றனர். இதற்கு பிரதான காரணமாக அவர்கள் வைக்கும் புகார் வாகன நிறுத்தம் வசதி போதிய அளவு இல்லை என்பதே.

கோவை அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, நஞ்சப்பா சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளின் ஓரம் வாகனங்கள் அதிக அளவு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அலுவலகம் செல்ல கால தாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். 



இது குறித்து எல். ராஜ்குமார் கூறுகையில் " வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் போன்றவை அதிக அளவு கோவை மாநகரில் உள்ளது. ஆனால் அதற்கேற்ப வாகன நிறுத்தம் செய்யும் வசதி அந்த கட்டடங்களில் போதுமானதாக இல்லை.இதன் காரணமாகவே சாலை ஓரங்களில் வாகனங்களை மக்கள் நிறுத்தி செல்லும் சூழ்நிலை உருவாகிறது. கட்டடங்களின் கட்டுமான பனியின் போதே வாகன நிறுத்தம் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்" என்றார்.

கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை காவல்துறையினர் ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவை போதுமானதாக இல்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தியிருந்தாலும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதற்கு தீர்வாக பல்அடுக்கு (மல்டிலெவல்) பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார் கூறுகையில் " தற்போது பார்கிங் பிரச்சனைகளை போக்க நகரின் பல பகுதிகளில் ஒன் வே பார்கிங் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் தரைதளம் பார்கிங் வசதிக்காக கட்ட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கட்டட உரிமையாளரிடம் வலியுறுத்த வேண்டும். பழைய கட்டடங்களில் பார்கிங் வசதி இல்லாத காரணத்தினால் பார்கிங்க்கு என இடம் ஒன்று ஒதுக்கி வாகனங்களை அதில் நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் விரைந்த செயல்படுத்த மாநகராட்சி அதிகாரியிடம் வலியுறுத்தப்படும்," என்றார்.

“2014-ம் ஆண்டு கோவை மாநகரின் வளர்ச்சிக்காக தமிழக அரசாங்கத்தால் ரூ.2௦௦௦ கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில், தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர பகுதிகளில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்படுத்தவில்லை,” என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

கோவை மாநகரின் பார்கிங் பிரச்சனைகளை போக்க இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...