தனியார் பேருந்து நிர்வாகத்தினரின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 27

தனியார் பேருந்து நிர்வாகங்களின் அத்துமீறிய நடவடிக்கைகளைத் தடுக்கக்கோரி அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. 



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூர்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து முன்னதாக செல்லவேண்டியிருந்தால், அதற்கு முன்பாகவே பயணிகளை ஏற்றி, அரசு பேருந்து ஒட்டுநரை எடுக்கச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.

மேலும், தனியார் பேருந்தின் நிர்வாகிகள் விரைவாக எடுக்கச்சொல்லி அரசு ஓட்டுநரை நிர்பந்தப்படுத்துவதாகவும், தங்களுக்கான நேரத்தை தாண்டியும் பயணிகளை ஏற்றுவதில் குறியாக இருப்பதாகவும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆம்னி மற்றும் ரெகுலர் சர்வீஸ் என்ற பெயரில் அனுமதி பெறாமல் பேருந்து நிலையத்திற்கு வெளியில் வைத்து அடியாட்களை கொண்டு பயணிகளை நிர்பந்தித்து ஏற்றுவதாக கூறினர். தனியார் பேருந்துகளின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டும் அரசுப்பேருந்து ஒட்டுநர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், கொலை மிரட்டல்களும் விடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. வசூலை மையப்படுத்தி அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் பயணிகளின் உடைமைக்கும், உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, தனியார் பேருந்து நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் எல்.பி எப்,சி ஐ டியூ உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...