திருமாவளவனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை, டிசம்பர் 11

சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் உருவ பொம்மையை பாஜகவினர் எரிக்க முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது.



பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ம் தேதியன்று, தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாகவும், அம்பேத்கர் நினைவு தினமும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த வாரம் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த கோயில்களைக் கட்ட வேண்டும் எனப் பேசியதாக செய்திகள் வெளியாகின. 

அவரின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட இந்து கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆங்காங்கே கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, திருமாவளவனின் பேச்சு இந்துக்களை அவமதிக்கும் செயல் எனவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் கூறி பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அவர்கள் விசிக தலைவரின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். 

இதனைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடமிருந்து உருவ பொம்மையை பறித்தனர். பின்னர், கண்டன கோஷங்களை எழுப்பிய பாஜக-வினர், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் ஈடுபடுவதாகவும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் அரசியல் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டினர். மேலும், திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...