மதுரை, நெல்லை வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 12

மதுரை மற்றும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவோயிஸ்ட்கள் தரப்பில் வாதாடி வந்த மதுரை வழக்கறிஞர் முருகன், அதே வழக்கில் இணைத்துக் கடந்த ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாகக் கோவையில் உள்ள 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிராக வாதாடும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். வழக்கறிஞர்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...