கோவை மாநகராட்சியின் வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி பொதுமக்கள் மனு

கோவை, டிசம்பர் 18

கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்டவற்றிற்கு வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் 85-வது வார்டு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகக் கோவை மாநகராட்சி 85-வது வார்டுக்குட்பட்ட பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வைப்புத் தொகை அதிகரிப்பு மற்றும் குப்பை வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, குடிநீர் வைப்புத் தொகையாக ரூ. 4 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், குப்பைகளைச் சுத்தம் செய்யவும் முறையாக வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில், கூடுதலாக மாநகராட்சி வரி வசூல் செய்வது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைகிறது.  எனவே, மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற வரி உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...