கழிவு நீரை இயற்கையான முறையில் தூய்மையான நீராக மாற்றி கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை, ஜனவரி 06

வீட்டு உபயோக கழிவுநீரை, பயோ பில்டர் முறையில் மீண்டும் தூய்மை நீராக மாற்றி ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 



ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு நாட்கள் வேளாண் கண்காட்சி இன்று தொடங்கியது. இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கள் படைப்புகளைக் கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில், அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில், அக்கல்லூரியைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு பயோ டெக்னாலஜி பிரிவியைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய பயோ பில்டர் அமைந்திருந்தது.

வீட்டு உபயோக கழிவுநீர்களான துணி துவைக்கும் நீர், பாத்திரங்கள் கழுவும் நீர், வீட்டைத் துடைக்கும் நீர் என இது போன்ற கழிவு நீர்களை மீண்டும் தூய்மை நீராக மாற்றி, இதே வேலைகளுக்கு மீண்டும் பயன்படுத்த உபயோகப்படுத்துவதுதான் இந்த பயோ பில்டரின் வேலை.

இதனை ஆர். அபிஷேக், ஆர். பிரியதர்ஷினி மற்றும் பி. வேதா ஆகிய மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த பயோ பில்டரில் இந்த கழிவுநீர்களை செலுத்தினால் அது தூய்மை நீராக மாறிவிடும். 

இது குறித்து ஆர்.அபிஷ்ய் கூறுகையில், "இந்த பயோ பில்டரில் அருகம் புல், கூலன் கல், மண், வெட்டி வேர் மற்றும் நிலக்கரி ஆகியவை ஒன்றில் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும். முதலாவதாக வீட்டு உபயோக கழிவு நீர்களை இந்த பில்டரில் செலுத்தும்முன் சோப்பு நுரை, எண்ணெய் பசை கொண்ட நீர்களை சில கெம்பிகள் கொண்டு அதனை நீக்க வேண்டும். அதன்பின், இந்த நீரினை பயோ பில்டரில் செலுத்தினால் தூய்மையான நீராக அது வடிகட்டிவிடும்.

சோப்பு நுரை, எண்ணெய் பசை போன்றவை மிகவும் கடினமானவை. அதனைப்போக்க நச்சு பொருட்கள் கலக்காத கெமிக்கல்கள் உபயோகிக்க வேண்டியது அவசியம். அதன்பின் பில்டர், அதில் உள்ள கேட்டதை நீக்கி விடும். இதில், சாதாரணமாக வண்டி கழுவும் நீர் போன்றவை நேரடியாக இந்த பயோ பில்டரில் செலுத்தலாம்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், உலகில் உள்ள மொத்த நீரில் வெறும் 0.01 சதவிகித நீர்தான் சுத்தமான நீராக உள்ளது. அதனைப் பாதுகாக்கவே இந்த முயற்சி. என்றார். 

இது போன்ற பயோ பில்டர்களை வீட்டில் உருவாக்க ஒருநாள் மட்டுமே போதும் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் செலவில் இதனை செய்திவிடலாம் என்கின்றனர் மாணவர்கள். அதேபோல, அருகம் புல், வெட்டி வேர் போன்றவைகள் கேட்டுப் போய்விடும் என்பதால், அதனை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் அளவில் இதனை வடிவமைத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

கண்காட்சியில் கவர்ந்த இந்த பயோ பில்டர் குறித்து பார்வையாளர்கள் கூறுகையில், நீரின் அவசியம் குறித்து இந்த பயோ பில்டர் பயன் உள்ளதாக இருக்கிறது. நீரினை வீணாக்காமல் மீண்டும் அதனை இயற்கை வழியிலேயே பயன்படுத்தும் இந்த முறை மிகவும் சிறந்தது. என்றனர்

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...