தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்ட அரசு பள்ளி சமையலறை- பெற்றோர்கள் புகார்

நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை, ஜனவரி 22

நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை, கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், இங்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். மேலும், மாணவர்களுக்கான சத்துணவை தயாரிக்கப் பயன்படும் சமையலறையை வெளி நபர் ஒருவர் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார்.

இதனால், மாணவர்களுக்கான உணவு திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் போதுமான பாதுகாப்பின்றி மாணவர்கள் உள்ளனர். உயர்கல்விக்காக தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இருக்கும் ஒரே ஒரு ஆரம்பப் பள்ளியிலும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...