தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் - கைது

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை, ஜனவரி 29

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.



தமிழக அரசு கடந்த 20-ம் தேதியன்று பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனைத்தொடர்ந்து, பேருந்துக் கட்டண உயர்வு 100 சதவிகிதம் உயர்த்தியிருப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தொடர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

தொடர்ந்து மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டமும், எதிர்கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் கட்டணத்தை சிறிது குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இருப்பினும் ஒரு சில பைசா மட்டுமே குறைக்கப்பட்டது. 

என்றாலும் ஏழை- எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முடிந்த அளவிற்கு கட்டணத்தை குறைத்து இருப்பதாக முதலமைச்சர் கூறினார். இந்த கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசின் இந்த பேருந்து கட்டணக் குறைப்பை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன. இந்த கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.



கோவை மாவட்டத்தில் வைசியால் வீதி, ஆர்.எஸ்.புரம், உக்கடம், காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல், பேருந்து நிலையம், சுந்தராபுரம், நஞ்சுண்டாபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், சிட்ரா, கணபதி, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் காவல்நிலையம் எதிரில் என 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 



இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்த நிலையில் 2 அயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி:-

இதேப் போன்று பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் 44 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



மேலும், இதேக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தேமுதிக-வினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...