‘விறு விறு’ விற்பனை: கோவையில் அமோகமாக விற்பனையாகும் கரும்புசாறு

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் கரும்பு சாற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் கரும்பு சாறு விற்பனை சுடுபிடித்துள்ளது.

கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் கரும்பு சாற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் கரும்பு சாறு விற்பனை சுடுபிடித்துள்ளது.

மார்கழி கழிந்து தை பிறந்த போதிலும் குளிர் நம் கோவையை விடுவதாயில்லை. அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் கடும் குளிரும் பனி மூட்டமும் நிலவி வருகிறது. அதே நேரத்தில், பகலில் பங்குனி மாதத்திற்கு நிகராக ‘பல்லைக்காட்டி’ சிரிக்கிறது வெயில்.,

இதனிடையே இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் அதிக அளவில் கரும்பு சாறுகளை பருகி வருகின்றனர். இளநீர் விலையை ஒப்பீடும் போது கரும்பு சாறு விலை குறைவாக உள்ளதால் விற்பனை அதிகமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

"நாள் ஒன்றிற்கு சராசரியாக தினமும் 100 டம்பளர் விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது 200 டம்பளர் வரை விற்பனை ஆகிறது. 250 மில்லி கிராம் கரும்பு சாறு ரூபாய் 20 மட்டுமே ஆனால் இளநீர் , பழச்சாறு போன்றவை ரூபாய் 30 முதல் 100 வரை விற்கப்படுகிறது." என்றார் கரும்புசாறு வியாபாரி செல்வராஜ்.

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு குளிர்பானங்கள் மீதான மோகம் குறைந்து இது போன்ற இயற்கை பானங்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.டி ஊழியர் பெருமாள்சாமி கூறுகையில், "வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கரும்பு சாறு தினமும் அருந்துகிறேன். இதற்கு முன்னர் குளிர்பானங்கள் வாங்கி வந்தேன் ஆனால் ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு இயற்கை பானங்கள் தான் அதிக அளவில் உபயோகிக்கிறேன்." என்றார்.

கரும்புசாறு உடலுக்கு மிகவும் நல்லது அதில் நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள் அதிமாக உள்ளது. வெயில் காலங்களில் கரும்புச்சாறு அருந்தும் போது உடல் சோர்வடையாது. ஆனால், நீரழிவு நோய் உள்ளவர்கள் இதனை மிகவும் குறைவாக தான் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...