பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடு : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச வழக்கில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக முனைவர் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச வழக்கில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக முனைவர் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர். 

கோவையில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், துணைவேந்தர் கணபதிக்கு பணம் பெற்று தந்ததாக அப்பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், துணைவேந்தர் கணபதி லட்சக்கணக்கில் பணம் பெற்று விதிமுறைகளை மீறி பணி நியமனங்கள் செய்து இருப்பதாகவும், அவற்றை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டுமென பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்த முனைவர் பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர். 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் கணபதி நியமித்ததாகவும், இந்த முறைகேடுகளில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவினர், தேர்வு குழுவினர், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு உண்டு எனக்கூறிய முனைவர் பட்டதாரிகள், முறைகேடுகளில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். மேலும், துணைவேந்தர் கணபதி நியமித்த பணி நியமனங்களை ரத்து செய்வதுடன், நேர்மையான முறையில் மீண்டும் தேர்வு நடத்தி தகுதியான நபர்களுக்குப் பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...