கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வில் வெற்றி பெறலாம் - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை: கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கேள்விகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் விதமாக தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சி கொடியாசிய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் சிவில் சர்விஸ் என்கிற போட்டி தேர்வு குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "சிவில் சர்விஸில் (போட்டி தேர்வு) மொத்தம் 23 வகைகள் உள்ளன. போட்டி தேர்வில் வெற்றி பெறும்போது குறைந்த வயதில் தலைமை பொறுப்பு கிடைக்கும். மேலும், பணியில் மனதிருப்தி கிடைக்கும்.



மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் கூட பதவிகள் கிடைக்கும். 

நான் மருத்துவம் பயின்றேன் அதன் பின் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது கோவை மாநகராட்சி ஆணையராக பணிபுரிகிறேன். ஒரு மருத்துவராக மனநிறைவு அடைந்ததை விட இதில் மனநிறைவு அதிகம் பெற்றேன். 

பதவிக்கு வந்தபிறகு நிறைய சிக்கல்கள் இருக்கும். ஆனாலும், மக்களுக்கு சேவையாற்றுவதால் மனநிறைவு கிடைக்கிறது.



கவனச்சிதறல் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் படித்தாலே போதும். இணையதளத்தைப் பயன்படுத்தி படிக்கலாம். 21 வயது என்பது தேர்வு எழுதுவதற்கான தகுதி. ஆனால், அதற்கான திட்டமிடுதல் தற்போதே அவசியம். சமூகத்தை நோக்கிய சிந்தனைகள் வரவேண்டும் அதற்கு செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்." என்றார்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி குறித்து மாணவர் எல்.லோகேஷ் கூறுகையில், "பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம்? என முடிவு செய்துவிட்டேன். ஆனால், எங்கு படிக்கலாம்? என்பதை அறியவே இங்கு வந்தேன். இங்கு வந்தது எனக்கு பயனுள்ளதாக உள்ளது." என்றார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...