சுந்தராபுரத்தில் கால்வாய் கட்டும் பணியில் தொய்வு: படாதபாடு படும் பொதுமக்கள்

கோவை: கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை: கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தெற்கு மண்டலம் வார்டு எண். 98-க்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள், இம்மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக, இருவழிப்பாதையாக இருந்த சாலை, ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகளுக்காக, கழிவுநீர் செல்லும் பாதை மண்ணைக் கொட்டி அடைக்கப்பட்டது. ஆனால், கடந்த இரு வாரங்களாக எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி வருகிறது.



மழை பெய்யும் நாட்களில் மழைநீர் கழிவுநீரோடு கலந்து பிரதான சாலையை நீர் குட்டையாக மாற்றிவிடுகின்றன. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீர் குட்டை அருகே மின்கம்பங்கள் இருப்பதால், மின்சார விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.



"சுமார் 20 நாட்களுக்கு முன் கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகளை தொடங்கினர், இன்றுவரை நிறைவடையவில்லை. கடை வாசலில் கழிநீர் தேங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் வர முடியவில்லை. இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் கடைகளை தற்காலிகமாக மூடிவிட்டனர். பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி, சுகாதர சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்த பின்னரும் பணிகள் துரிதப்படுத்தப்படவில்லை, என அவர் படும் இன்னல்களை தெரிவிக்கிறார் மளிகை கடை உரிமையாளர் முருகேசன்.



கடந்த இரு வாரங்களில் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. முறையான விபத்து எச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் வைக்கப்படாததால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கழிவுநீர் குட்டைக்குள் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.



பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சுந்தராபுரத்தை அடுத்துள்ள அண்ணா நகர் வழியாக வடிந்து மதுக்கரைக்கு செல்கிறது. இப்பகுதியில் கால்வாய் வடிகால் அமைக்கப்படும் போதே, ஆழமாக வடிகால்களை அமைத்திருந்தால், சீரமைப்புக்காக ஆகும் செலவுகளையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களையும் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.



கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேட்டிலிருந்து பொதுமக்களையும், விபத்துகளிலிருந்து வாகன ஓட்டிகளையும் மாநகராட்சி நிர்வாகத்தினர் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...