அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ் வழங்குவது இழுத்தடிப்பு: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கோவை: கோவை மாவட்டத்திற்கு அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாவட்டத்திற்கு அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செட்டாப் பாக்ஸ்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக கோவை ஆபரேட்டர்களுக்கு வழங்கவில்லை. இது குறித்து கோவை மற்றும் சென்னை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் முறையான பதில் அளிக்கப்படவில்லை. மேலும், செட்டாப் பாக்ஸ் வாங்க தலா ரூ. 30 வீதம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட 2,50,000 விண்ணப்பங்களுக்கான தொகை ஆபரேட்டர்களால் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனில் செலுத்தப்பட்டது. 

செட்டாப் பாக்ஸ்களுக்கான முழுத்தொகையான ரூ.180 வீதம் அனைத்து செட்டாப் பாக்ஸிற்கான தொகையை செலுத்தியுள்ளோம். இருப்பினும், கோவைக்கு மட்டும் செட்டாப் பாக்ஸ்களை வழங்காமல் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மறுத்து வருகிறது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 'அட்சயா' என்ற பெயரில் பந்தய சாலையில் தனியார் கேபிள் டிவி தொடங்கி, அதன்மூலம் செட்டாப் பாகஸ்கள் விற்க திட்டமிட்டுள்ளார். தனியார் செட்டாப் பாக்ஸ்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு செட்டாப் பாக்ஸுகள் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை, அமைச்சர் தடுக்க நினைப்பது துரோகம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...