ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த மூதாட்டி: விபரம் தெரியாமல் வந்ததாக விளக்கம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆலாந்துறை போயர் காலணி பகுதியை சேர்ந்தவர் வீரமணி என்கின்ற வீரம்மாள்(65). இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வந்திருந்தார். வழக்கமாக மனு அளிக்க வருபவர்களிடம் சோதனை நடத்தும் காவலர்கள் மூதாட்டியின் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அவரிடம் அரை லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.



தொடர்ந்து, அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்த போலீசார் விசாரித்தனர். அப்போது, தனக்குச் சொந்தமான வீட்டை தங்கை ஏமாற்றி விட்டதால் மனு அளிக்க வந்திருப்பதாக மூதாட்டி தெரிவித்தார். மேலும், குனியமுத்தூரில் வசிக்கும் தனது மகள் கேட்டு கொண்டதின் காரணமாக, அவரிடம் கொடுக்க மண்ணெண்ணெய் வாங்கி வந்ததாகக் கூறிய மூதாட்டி, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்று தனக்கு விபரம் தெரியாது என பரிதாபமாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் உதவியுடன் மனு அளிக்கச் சென்றவர், மனு அளித்த பின்னர் பாட்டிலை திரும்ப வாங்கிச் சென்றார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...