பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, பள்ளி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி வாகன சோதனை கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் இன்றும், நாளை மறுதினமும் நடக்கிறது.



இன்று மட்டும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 488 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்து உள்ளன. இந்த வாகனங்களில் பள்ளியின் பெயர், முகவரி, குழந்தைகள் ஏறிச் செல்லும் படிகளின் அளவு, ஜன்னல்களின் அளவு, எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள், நம்பர் பிளேட்டுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், அவசர கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 19 வகையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வாகனம் இயக்குவது மற்றும் பராமரிப்பு குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதேபோல, 16 வகையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இந்த ஆய்வில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பேசுகையில், "இந்த ஆய்வானது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் வருவாய் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டும் ஆய்வுப் பணி முதற்கட்டமாக நடைபெறுகிறது. இதில், பள்ளி வாகனங்களில் அவசரகால வழி படிக்கட்டுகளின் அளவுகள் போன்ற 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன," என்றார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...