கர்நாடகத்தில் பா.ஜ.க., ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வாழ்த்து

சென்னை: கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சென்னை: கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பா.ஜ.க., தக்க வைத்துள்ளது.

"கர்நாடக மாநிலத்தில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரி நீர் எந்தத் தடையும் இன்றி தமிழகத்தை வந்தடையும்" என்று தமிழக பா.ஜ.க., தலைவர்கள் கூறி வாத நிலையில், தற்போது அம்மாநிலத்தில் பா.ஜ.க., ஆட்சியமைக்கிறது.

இந்த சூழலில் தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., முன்னிலை வகிப்பதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் கூறுகையில், "கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் பா.ஜ.க.,வுக்கு வாழ்த்துக்கள். காவிரி விவகாரம் தொடர்பாக செயல் வரைவு திட்டம் ஒன்றை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு செயல் வரைவு திட்டத்தை அளிக்கும் பட்சத்தில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பின் படி, காவிரி தமிழகத்திற்கு உறுதியாக வந்தடையும்." என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...