நிபா காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டு

கோவை: நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்காக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.


கோவை: நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்காக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக இதுவரை அம்மாநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் கோவை அரசு மருத்துவமனையில் நிபா சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது:-

நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 20 படுக்கைகள் கொண்ட இந்த தனி வார்டில் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் கூட இக்காய்ச்சலினால் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு அதிகளவிலான மக்கள் சென்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.



அதேபோல, நிபா காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து எச்சரிக்கையாக நோயாளிகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையை உடனடியாக நாட வேண்டும். இக்காய்ச்சல் எளிதில் பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வவ்வால்கள் மூலமாக இக்காய்ச்சல் பரவும் என்பதால் பறவைகள் கடித்த பழங்களை உட்கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...