நிபா வதந்தியில் கோவை வ.உ.சி பூங்கா

கோவை: கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரசால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்நோய் பற்றிய அறிய தகவல்களும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கோவை : கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரசால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்நோய் பற்றிய அறிய தகவல்களும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கோவை மாவட்டம் கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளதால் நிபா வைரஸ் பற்றிய பதற்றம் இங்கு அதிகமாகவே உள்ளது.



நிபா வைரஸ் வௌவால்களால் பரவுகிறது, அதனால் வௌவால்கள் அதிகம் வசிக்கும் வ.உ.சி பூங்காவிற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அங்கு விற்கப்படும் உணவுகளை பொதுமக்கள் வாங்கி உன்னுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் உலாவி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வ.உ.சி பூங்காவில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டதாகவும், நடைபாதை கடைகளில் உணவு விற்பனை சரிந்துவிட்டதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.



இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம், நிபா வதந்திகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பரப்பப்படுபவை என்றும், இதனால் வௌவால்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்ந்து, பூச்சிகளும், கொசுகளும் பெருகிவிடும் என்றும் அவற்றை அழிக்க பிரத்தியேக பூச்சிக் கொள்ளிகள் சந்தைப்படுத்தப்படும் என்கிற செய்தியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.



"வ.உ.சி பூங்கா பற்றிய வதந்திகள் அனைத்தும் அரசால் பரப்பப்படுபவையே. ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல் வ.உ.சி பூங்கா பகுதிகளில் இளைஞர்கள் போராட்டங்களை தொடங்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது." என்கிறார் பீளமேட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரவிக்குமார்.



இந்நிலையில், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் கூறுகையில், "நிபா வைரஸ், வௌவால் மற்றும் பன்றிகளின் உணவு எச்சத்தின் மூலம் தான் பரவுகிறது. எனவே, பறவைகள் கொரித்த பழம் என்று எண்ணி சேதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி உண்ண வேண்டாம். வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். 



நோய் தொற்று உள்ள பன்றிகளை அருகில் சேர்க்காமல், சிகிச்சைக்குக் கொண்டு செல்ல வேண்டும். தேவையில்லாத வதந்திகளை எண்ணி பயப்படத் தேவையில்லை. சுத்தமாக இருப்பதே நோய் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் முதல் நடவடிக்கை. மேலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வௌவால் அதிகமாக காணப்படும் வ.உ.சி பூங்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசனிகள் தெளிக்கும் பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது." என்றார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...