கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி!

கோவையில் வோடபோன் நிறுவனம், புற்றுநோய் விழிப்புணர்வை குறித்த மாரத்தான் போட்டியை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.



 வோடபோன் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டிகள்  நடத்தி வருகிறது. நேற்று, காலை 5 மணியளில் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் துவங்கப்பட்டது. இதில் ஆண்கள் , பெண்கள் என  சுமார் 12 ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க அனுபவமிக்க மூத்த குடிமக்கள், குழந்தைகள் என ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதில்,  முதல் பிரிவாக 21 கி.மீட்டரும், இரண்டாம் பிரவில் 10 கி.மீ., மூன்றாம் பிரிவாக 5 கி.மீ., என அமைந்திருந்தது. 21 கி.மீ., போட்டியின்  ‘ ரூட் மேப் ’, நேரு ஸ்டேடியத்தில்  துவங்கி பார்க் கேட் வழியாக, ஹிந்தி அலுவலகம், எல்.ஐ.சி சந்திப்பு, ஹீசூர் சாலை, ரெட்கிராஸ் பில்டிங், கே.ஜி., திரையரங்கம், ரேஸ்கோர்ஸ் பிக்பஜார் வழியாக சுங்கம், காமராஜ் சாலை, என இறுதியில் ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்தை அடைந்தது.


  
இது போன்று 10 கி.மீ., மற்றும் 5 கி.மீ., போட்டிகளுக்கும் ரூட் மேப் அமைக்கப்பட்டிருந்தனர்.

போட்டியில் இறுதியில் வெற்றி பெற்ற வீர வீராங்களைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனர்.

























Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...