பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த அதிரடி தாக்குதல்... ஆதாரங்களை அளித்தது ராணுவம்!

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான விடியோ ஆதாரங்களை மத்திய அரசிடம் இந்திய ராணுவம் அளித்திருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்தார்.

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசிடம் விடியோ ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, டெல்லியில் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், புதன்கிழமை கூறுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ அல்லது பிரதமரோ விளக்கம் அளிக்கவில்லை. அது தொடர்பாக, ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்தான், ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவுகள், மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன," என்றார் அவர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...