படிப்பை தொடங்க ஏற்றநாள் விஜயதசமி- வழிபாட்டில் பெற்றோர்கள்

கோவை, அக். 11-

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பல்வேறு விரதத்துடன் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது. இதில் முதல் 3 நாட்கள் துர்கா தேவி நாளாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி நாளாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த 9 நாட்களின் இறுதியில் கொண்டாடப்படும் 10வது நாளே விஜயதசமி ஆகும். இந்த நாளில் குழந்தைகளை பள்ளிக்கு சேர்த்தாலோ அல்லது எழுத, படிக்க வைத்தாலோ அக்குழந்தை சிறப்பாக படிக்கும் என்பது ஐதீகம். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விஜயதசமி தினம் புதனன்று (இன்று) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 



கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.



இதில், கொட்டப்பட்ட நெட்களில் குழந்தைகள் ''அ'' என எழுதியும், குழந்தையின் நாக்கில் நெல் மணியால் ''அ'' என எழுதியும் பெற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.







Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...