சிறப்பு விற்பனையில் கோ- ஆப்டெக்ஸ்

தமிழகம் முழுவதும் நெசவாளர்களின் கைவண்ணத்தை எவ்வித லாப நோக்கமும் இன்றி விற்பனை செய்ய துவங்கப்பட்டதே கோ- ஆப்டெக்ஸ் துணி அங்காடியாகும். கோவை வஉசி அருகே செயல்பட்டுவரும் கோ- ஆப்டெக்ஸ் அங்காடி தனது சிறப்பு விற்பனையை செப்டம்பர் 15 முதல் தொடக்கி 2017 ஜனவரி 31ம் தேதிவரை நடத்தவுள்ளது. இந்த விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.



இந்த கோ- ஆப்டெக்ஸ்-யில் பெண்களுக்கான இயற்கை நூலால் தயாரிக்கப்பட்ட சேலை, காஞ்சிபுரம் பட்டு, பரமக்குடி காட்டன், நெகமம், கோவையின் சிறப்பான கோரப்பட்டு, உரையூர் பட்டு, ஜெயகார்திகா பட்டு உள்ளிட்ட ஏராளமான சேலைகள் இடம்பெற்றுள்ளன. ஆண்களுக்கென லெனின் நூலால் நெய்யப்பட்ட சட்டைகளும், வீட்டு உபயோகப்பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.





மேலும், இந்த சேலைகளை நெசவு செய்யும் போது நெசவாளர் மேற்கொண்ட வழிமுறைகள், அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் சேலையின் விலைப்பட்டியலுக்கான அட்டையிலேயே குறிப்பிட்டுள்ளனர்.



இதுகுறித்து கூறிய பாரதியார் பல்கலைக்கழக ஐஏஎஸ் பிரிவின் இயக்குனர், தான் ஆண்டுதோறும் இங்கு பொருட்களை வாங்கிச்செல்வதாகவும், வேறு எங்கும் கிடைக்காதே நல்ல முறையிலான துணி ரகங்கள் இங்கு கிடைக்கின்றன. விலையில் சிறிதளவு கூட மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் பணம் முழுவதும் நெசவாளர்களுக்கே சேரும் என தெரிவித்தார். 



கோ- ஆப்டெக்சின் பிராந்திய மேலாளர் கூறுகையில், கோ- ஆப்டெக்சின் முக்கிய குறிக்கோலே நெசவாளர்களின் பொருட்களை விற்பனை செய்வது ஆகும். இங்கு நெசவாளர்கள், இயற்கை பொருட்கள் தவிர்த்து வேறு எதுவும் விற்பனை செய்யப்படுவது இல்லை. கோ- ஆப்டெக்சின் மூலம் நிர்ணயிக்கப்பட்டு பெறப்படும் பணம் அனைத்தும் நெசவாளர்களிடமே கொடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...