சாதியைப் பற்றி இழிவுபடுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை: பொள்ளாச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவனை சகமாணவர்களின் மத்தியில் சாதியைப் பற்றி இழிவுபடுத்தி பாகுபாடு செய்து தாக்குதல் நடத்திய பள்ளியின் ஆசிரியர் ஓவிய மற்றும்  தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;

பொள்ளாச்சியில் உள்ள A.நாகூர் அரசு மத்திய மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ஆனந்த் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். பள்ளிக்கு சென்ற மாணவன் ஆனந்தை பள்ளி ஆசிரியர் ஓவிய, மற்றும் தலைமை ஆசிரியர் சகமானவர்கள் மத்தியில் அம்மாணவனை தாழ்த்தப்பட்ட சாதி என்று இழிவுபடுத்தியும் படிப்பதற்கு தகுதி இல்லையென்றும் கூறியும், மாணவனை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரை கேட்டபோது, படிக்க வைப்பதற்கு விருப்பம் இருந்தால் இங்கு படிக்க வையுங்கள் இல்லை என்றால் டி.சி வாங்கிக்கொண்டு செல்லுமாறும் கூறினர். பெற்றோரிடம் மறைமுகமாக சாதியை பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது அவமானமாக இருந்ததாகவும், பின்னர் ஆனந்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுமதித்து. இது தொடர்பாக கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும், ஆனந்த் மற்றும் பெற்றோர்க்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மாணவன் அப்பள்ளியில் படிப்பை மேற்கொள்ள நிர்வாகம் தகுந்த ஏற்பாடு செய்யவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...