பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது


சென்னை: பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், அண்ணா சாலை போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

நேற்று முன்தினம் இரவு ஸ்பென்சர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு பைக்கில் வந்த 3 பேரை மடக்கி, பைக் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (20), கவுதம் (19) மற்றும் குமார் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் எனவும் தெரிந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்படும் பைக்குகளை திருடியது தெரியவந்தது.  அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...