துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மியான்மரில் மோதல்; 12 பேர் சாவு

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய கலகக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பியாங்பிட் என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்களும், துப்பாக்கிகளையும், வாள்களையும் ஏந்தி வந்த கலகக்காரர்களும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர், கலகக்காரர் ஒருவர் என 5 பேர் பலியாகினர்.

இதற்கிடையே டாங் பாயிங் நயார் என்ற இடத்திலும், கலகக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 7 பேர் உயிரிழந்தனர். இறந்து போனவர்களின் உடல்கள் அருகே வாள்களும், தடிகளும் கிடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மோதல்களை தொடர்ந்து அந்தப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...