குஜராத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் இருவர் கைது : ராணுவ நடவடிக்கைகளை நோட்டமிட்டதாக விசாரணயில் தகவல்

காவ்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ உளவாளிகள் 2 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்தா நகரில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது முகமது அலானா மற்றும் சஃபூர் சுமாரா ஆகிய இரண்டு பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பாகி்ஸ்தான் நாட்டின் சிம் கார்டுடன் கூடிய செல்போன்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை அவர்கள் கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து பாகிஸ்தானில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததாக அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பயங்கரவாதிகள், அதற்காக சுமார் 250 பேரை ஊடுருவவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், I.S.I உளவாளிகள் இரண்டு பேர் குஜராத்தில் பிடிப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...