முதல்வர் குறித்து அவதூறு- நீதிமன்றக் காவலில் வங்கி ஊழியர்கள்



முதல்வர் குறித்து அவதூரான தகவல்களை பரப்பியதாக கோவையில் வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கோவை, தொண்டாமுத்தூர் ஐயன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (49) மற்றும் சுரேஷ் (58). தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் கனரா வங்கியில் ரமேஷ் எழுத்தாளராகவும், சுரேஷ் தங்க நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதியன்று அதிமுக மகளிர் அணி உறுப்பினரும், உள்ளாட்சித் தேர்தலில் 9வது வார்டில் கவுன்சிலராக போட்டியிடும் புனிதா தேவி மேற்குறிப்பிட்ட வங்கியில் பணம் செலுத்த சென்றுள்ளார். அப்போது, ரமேஷ் மற்றும சுரேஷ் இருவரும் இணைந்து புனிதா தேவியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குறிய கருத்தினை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வியாழனன்று புனிதா தேவி சில அதிமுக உறுப்பினர்களுடன் சென்று ஏன் முதல்வர் குறித்து அவ்வாறு பேசுகிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். அப்போதும், இருவரும் முதல்வர் குறித்து அவதூரான கருத்தையே தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, புனிதா தேவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வங்கி ஊழியர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகியோரை வெள்ளியன்று (இன்று) கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின் இந்த வழக்கு குறித்து விசாரித்த 6வது நடுவர் நீதிபதி ராஜவேலு, இருவரையும் 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும், இந்த வழக்கு குறித்தான விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.



Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...