ராணுவம் பேசாது; வீரத்தை காட்டும்: பிரதமர் மோடி புகழாரம்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போர் நினைவிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘ராணுவம் பேசாது; வீரத்தை செயலில் காட்டும்’ என்று புகழ்ந்து பேசியதுடன், ‘தேசம், எல்லைகளை கடந்த பல மனித உயிர்களை காப்பாற்றியவர்கள் நமது ராணுவ வீரர்கள்’ என பாராட்டினார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவிடம் 41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதில் முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர். சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்டு எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின. அதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி, தனது பேச்சை தொடங்கினார். அவர், பேசியதாவது: நமது ராணுவம் எப்போதும் பேசுவதில்லை. தனது வீரத்தை செயலில் தான் காட்டுகிறது. அதைத்தான் நமது பாதுகாப்பு அமைச்சரும் செய்கிறார். நாம், ராணுவ வீரர்களைப் பற்றி பேசும் போது, அவர்களின் சீருடை, வீரத்தை பற்றிதான் பெரும்பாலும் குறிப்பிடுகிறோம். அதையும் தாண்டி, மனிதநேயத்தின் உதாரணமாக அவர்களை நாம் பார்க்க வேண்டும்.

ஐநா அமைதிப்படையில் மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது ராணுவம், எல்லை, தேசத்தை தாண்டி பல மனித உயிர்களை காப்பாற்றி உள்ளது. ஏமன் உள்நாட்டு போரில், பொதுமக்களை மீட்பதில் ராணுவம் முக்கிய பங்காற்றியது. அப்போது இந்தியர்களை மட்டுமின்றி சில பாகிஸ்தான் மக்களைக் கூட நமது ராணுவம் காப்பாற்றி வந்துள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ராணுவம் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றியது. காஷ்மீரில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நமது ராணுவத்தினர், அங்குள்ள சில மக்கள் நம் மீது கல்வீசியவர்களாயிற்றே என ஒருபோதும் நினைக்காமல் பலரை காப்பாற்றி உள்ளனர். இப்படி, எல்லையை காப்பது மட்டுமின்றி பேரிடர் சமயத்திலும் அவர்கள் நம் உயிரை காப்பாற்றியுள்ளனர் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே பென்ஷன் திட்டத்தில், முந்தைய அரசுகள் பொய்யான பல வாக்குறுதிகளை அளித்தன. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ராணுவ வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக இந்த அரசு பெருமை கொள்கிறது.

எல்லையில் உயிரை பணயம் வைத்து, இரவு பகலாக அவர்கள் பாதுகாப்பதால் தான் நம்மால் இங்கு இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது. சில நாடுகளில் ராணுவ வீரர்களை விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ பார்க்கும் போது, மக்கள் எழுந்து நின்று, கைதட்டி அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர். அதை நாமும் கடைபிடிப்போம்.இவ்வாறு மோடி பேசினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...