பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ராணுவம் நாளை விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் (சர்ஜிகல் அட்டாக்) நடத்தியது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் வெளியுறவுத் துறைச் செயலரும், இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் வரும் 18-ஆம் தேதி விளக்கம் அளிக்கவுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ படைப்பிரிவு முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் பலியாகினர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதே மாதம் 29-ஆம் தேதி புகுந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்நாட்டு ராணுவம் மறுத்து வருகிறது. இதேபோல், இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் சந்தேகம் எழுப்பின. குறிப்பாக, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், துல்லியத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை தரகு வேலை செய்வதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக எம்.பி. பி.சி. கந்தூரி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிடம் ராணுவ துணைத் தளபதி பிபின் ராவத் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் குறித்து விளக்கினார்.

இந்நிலையில், தில்லியில் வரும் 18-ஆம் தேதி கூடவிருக்கும் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனர்.
இதுகுறித்து மக்களவைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தில்லியில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையில் வரும் 18-ஆம் தேதி கூடுகிறது. இதில் வெளியுறவுத் துறைச் செயலர், மத்திய உள்துறைச் செயலர், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் ஆகியோர் நேரில் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...