தீபாவளியை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: தீயணைப்புத் துறை அறிவுரை


தீபாவளியை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் விதத்தில் கோவை மாவட்ட தீயணைப்புத் துறை பல முன்னெச்சறிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சந்திரன் நமது நிருபரிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மட்டும் 8 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை, கோவை தெற்கு - 0422 2300101, கோவை வடக்கு - 0422 2450101, கணபதி - 0422 2511001, பீளமேடு - 0422 2595101, பொள்ளாச்சி- 954259 223333, மேட்டுப்பாளையம் - 04254 222299, அன்னூர் - 04254 264101 மற்றும் வால்பாறை - 95425 9222444 ஆகிய 8 பகுதிகள் ஆகும். 



அவரச காலங்களில் உதவும் வகையில் கோவை மாவட்டத்தைச் சுற்றிலும் இந்த தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. வரும் தீபாவளிக்காக கோவை மாவட்டத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என தீயணைப்புத் துறை முன்னெச்சறிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தீயணைப்புத் துறையின் சார்பில் தீபாவளிக்கு முந்தைய நாள், தீபாவளி நாள், தீபாவளிக்கு அடுத்த நாள் என மூன்று நாட்களுக்கு காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர். டவுன்ஹால் உள்ளிட்டு பல பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருக்கும். அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் தீயணைப்புத் துறையின் பொது எண்ணான 101-க்கு தகவல் தெரிவிக்கலாம், மேலும், மேற்குறிப்பிட்டுள்ள அந்தந்தப் பகுதி தீயணைப்பு நிலைய எண்ணிற்கு தொடர்பு கொண்டால் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். 



பட்டாசுக் கடை:

பட்டாசுக் கடைகள் அமைக்க பல அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோக பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசுக் கடைக்காரர்கள் தங்களது கடைக்குள் மணல் மற்றும் தண்ணீரை அதிகளவில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். கடையினை பிரபலப்படுத்த சில பட்டாசுக் கடைகளின் முன்பே பட்டாசுகள் வெடிக்கப்படும். அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். மெழுகுவர்த்தி, கொசுவத்தி, தீப்பெட்டி உள்ளிட்டவற்றை கடையினுல் பற்றவைக்கக் கூடாது. பட்டாசுக் கடைகள் அனைத்தும் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் செயல்படுகின்றனவா என்று தீபாவளியின் முந்தைய நாள் ஆய்வு செய்யப்படும். அப்போது, விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசுக் கடையின் உரிமையாளர் காவல்துறைடம் ஒப்படைக்கப்படுவார்.

விழிப்புணர்வுப் பிரச்சாரம்:

நாளை (அக்.19) முதல் மாவட்டம் முழுவதும் தீயணைப்புத் துறையின் சார்பில் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அதுபோக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது இடங்கள், அரசு அலுவலகம், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரம் மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தீயணைப்புத் துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா அவரின் அறிவுரையின் பேரிலும், இணை இயக்குநர் விஜய சேகரின் வழிகாட்டுதலின் படியும் இத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு சந்திரன் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...