பிரம்படியால் பெண் கதறல்: பார்த்தவர்கள் கைதட்டி ரசிப்பு

ஆசேஹ்: இந்தோனேஷியாவில், பொதுமக்கள் முன்னிலை யில், பெண்ணுக்கு பிரம்படி வழங்கப்பட்டது. வலி தாங்காமல், அந்த பெண் கதறியதை, வேடிக்கை பார்த்தவர்கள், கைதட்டி ரசித்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், ஆசேஹ் மாகாணம், தன்னாட்சி அதிகாரம் பெற்றது; இங்கு, 'ஷரியத்' சட்டம், கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சூதாடுவது, மது குடிப்பது, திருமணத்திற்கு முன், ஆணும் பெண்ணும் சுற்றி திரிவது, ஓரினச் சேர்க்கை ஆகியவை, கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன. இந்த குற்றங்களை செய்பவர்களுக்கு, பலர் முன்னிலையில், பிரம்படி வழங்கப்படும்.

இந்நிலையில், ஷரியத் சட்டத்தை மீறிய, 20 முதல், 30 வயதுக்கு உட்பட்ட, ஏழு ஆண்கள், ஆறு பெண்களுக்கு, தலைநகர் பண்டா ஆசேஹில் உள்ள மசூதியில், பலர் முன்னிலையில், 23 பிரம்படி வழங்கப்பட்டது; இதில், ஒரு பெண், வலி தாங்காமல் கதறினார். அதை பார்த்த மற்றவர்கள், கைதட்டி ரசித்தனர்.

''தவறு செய்த ஒரு பெண், கர்ப்பிணி என்பதால், அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. குழந்தை பெற்ற பின், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும்,'' என, பண்டா ஆசேஹ் துணை மேயர் ஜைனல் அர்பின் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...