இரண்டாவது நாளாக ரயில் மறியல்: 17 ஆயிரம் பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, விவசாயிகள், தி.மு.க., - காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், நேற்று இரண்டாவது நாளாக, ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை எழும்பூர், கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையங்களில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. இதனால், ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர். வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

தள்ளுமுள்ளு: அரியலுார் மாவட்டம் செந்துறை ரயில் நிலையத்தில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், ரயில் நிலையம் முன், இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது; 159 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில், தி.மு.க., - கம்யூ., கட்சியினர் ரயிலை மறித்தும், தண்ட வாளத்தில் சமைத்தும் போராட்டம் நடத்தினர். கும்பகோணம், ஆயக்குடி போன்ற இடங்களில் மறியலில் ஈடுபட்ட, 2,000 பேர் கைது செய்யப்பட்டனர். மைசூரு - திருச்சி ரயிலை மறித்து, த.மா.கா.,வினர் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய ஊர்களில், மறியல் போராட்டம் நடந்தது.

கஞ்சித்தொட்டி: நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் குத்தாலத்திலும், சீர்காழியில் நடந்த மறியலிலும், தி.மு.க., - ம.தி.மு.க., - கம்யூ., கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சீர்காழி யில், கட்சியினர் தண்டவாளத்தில் படுத்தும், விவசாயிகள், ரயில் பாதையில் கஞ்சித்தொட்டி திறந்தும் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 17 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து: தமிழகத்தில், நேற்று இரண்டாவது நாளாக நடந்த ரயில் மறியல் போராட்டத்தால், கோவை - மன்னார்குடி; சென்னை எழும்பூர் - திருச்சி சோழன்; திருச்சி - எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பாதியில் ரத்து: வேளாங்கண்ணி - வாஸ்கோட காமா; வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்கள், தஞ்சை - வேளாங்கண்ணி இடையே ரத்து செய்யப்பட்டன. மன்டுவாடி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...