"வாழ்க்கையை கொண்டாடுவோம்"- புற்றுநோயை வென்று வாழ்வோரின் நினைவுப் பயணம்


புற்றுநோய் என்ற சொல்லை பலரும் விரும்பாததன் காரணம் இந்த நோய் குறித்து இருக்கும் பயம் மற்றும் சந்தேகங்களே ஆகும். அனேகமாக இந்த நோயின் பக்கவிளைவுகள் மற்றும் நோயிலிருந்து மீண்டு வரும் விகிதம் குறைவாக இருப்பதும் கூட இதன் தொடர்புடையதாகும். ஆனால், நிறைய வகை புற்றுநோய்கள் ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக்கூடியவை என்ற உண்மையை அனைவரும் தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்று புற்றுநோய் எனப்படும் பயங்கரமான நோய்க்கு லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை முறை ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

வெற்றிகரமான விளைவுக்கு தேவையானது ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் கண்டறிவது, மன உறுதி, சிகிச்சை முடியும் வரை முழு ஒத்துழைப்பு ஆகும். 

இதுகுறித்தான நிகழ்ச்சி கோவை ஜெம் மருத்துவமனையின் சார்பில் ''வாழ்க்கையை கொண்டாடுவோம்''- புற்றுநோயை வெற்றிகரமாக ஜெயித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஒரு நினைவுப் பயனம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் பங்கேற்ற ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் சி.பழனிவேலு பேசுகையில், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை குறிப்பாக புற்றுநோயை லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை மூலம் குணப்படுத்தமுடியும் என்று தற்போதைய சிகிச்சை முறை பற்றி விளக்கினார். ஜெம் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்ட பல புற்றுநோய் சிகிச்சை முறைகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையாகும் என்பதையும் எடுத்துக்கூறினார்.



இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்டம் 3201-ன் மாவட்ட இயக்குநர் பிரகாஷ் அங்கப்பன், துணை ஆளுநர் வரதராஜன் மற்றும் கூடுதல் ஆளுநரும் பங்கேற்று உரையாற்றினர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...