மார்பக கட்டியை அகற்ற தழும்பில்லா சிகிச்சை - கே.எம்.சி.எச் அறிமுகம்


உலக அளவில் மார்பகக் கட்டிகளை சிறுசிறு துகள்களாக உடைத்து, அவற்றை ஊசியில் உறிஞ்சி எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதில் எவ்வித தழும்பும் ஏற்படாது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இத்தகைய உறிஞ்சி எடுக்கும் கருவி உதவியுடன் கட்டிகள் நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த முறையை மார்பக படமாக்கல் மற்றும் ஆய்வு ஆலோசகரான மருத்துவர் ரூபா ரங்கநாதன் வெள்ளியன்று (இன்று) அறிமுகம் செய்தார்.



சில ஆண்டுகளுக்கு முன் சான் டியாகோ பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே இம்முறை செயல்பாட்டில் உள்ள மார்பக பரிசோதனை மையத்தில் பணியாற்றி ஆய்வும் மேற்கொண்டவர் மருத்துவர் ரூபா. மார்பக படமாக்கல், பரிசோதனை மற்றும் கதிரியக்க நிபுணராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். 



இதுகுறித்து அவர் கூறுகையில், ''இளம் பெண்களின் மார்பகங்களில் எவ்வித வலியும், தழும்பும் இல்லாமல் முழுமையாக கட்டியை அகற்றும் சிகிச்சை உண்மையில் பிரமிக்க வைப்பதாக உள்ளது. இந்தியாவில் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய சிகிச்சை அளிக்கும் முறை உள்ளது. தற்போது அது கோவை மெடிக்கல் சென்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெற்றிடத்தை உருவாக்கி, உறிஞ்சி எடுக்க உதவும் இந்த கருவியானது கட்டிகளை நீக்க மட்டுமின்றி ஒரு பகுதியில் உள்ள சந்தேகத்திற்கு இடமான, உணர முடியாத திசுக்களை ஆராய்ந்து கண்டறியவும் உதவும்'' என்றார்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், ''அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்களின் மார்பக பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. கோவையில் அத்தகைய வசதிகள் கொண்ட ஒரு மருத்துவ மையத்தை ஏற்படுத்தியிருப்பது மருத்துவத்தில் ஒரு புரட்சிகர மாற்றம். இந்த முறையில் முன்னோடியாக ஒரே இடத்தில் பெண்களின் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தழும்பு இல்லாத இந்த மார்பக அறுவை சிகிச்சை முறையானது மார்பக மையத்தை மேலும் ஒரு படி உயரச் செய்துள்ளது'' என்றார்.



Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...