ஒடிசா மருத்துவமனை தீ விபத்து எதிரொலி : சுகாதாரத்துறை அமைச்சர் நாயக் ராஜினாமா

ஒடிசாவில் பிரபல தனியார் மருத்துவமனையில் 25 பேர் உடல் கருகி பலியானதை அடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை நேரிட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நாயக்கை கண்டித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை முதலமைச்சர் நவீன்பட் நாயக்கிற்கு நாயக் அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ள பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயக் தார்மீக அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் தீ விபத்து நிகழ்ந்த மருத்துவமனைக்கு தகுதியை மீறி அவரது மனைவி மூலம் நாயக் சலுகைகளை வழங்கியதே விபத்துக்கு காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் கல்வி நிறுவனம் ஒன்றில் நாயக்கின் மனைவி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...