205.5 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் முடிவு

சாவ் பாவ்லோ: இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் 205.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,379 கோடியை) அபராதமாக செலுத்த முடிவு செய்துள்ளது.

லஞ்சம்:

பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் நிறுவனம் இந்தியா, டோம்னிக் குடியரசு, சவூதி அரேபியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற, கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை அமெரிக்க கோர்ட் (எஸ்.இ.சி.,) விசாரித்து வருகிறது.

விற்பனை:

இந்தியாவுடன் 3 விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2008ம் ஆண்டு எம்பயர் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ரூ.1,391 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்திய தரப்புக்கு ரூ.36 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் டோம்னிக் குடியரசு (8 விமானங்கள்), சவூதி அரேபியா (3 விமானங்கள்), மொசாம்பிக்(2 விமானங்கள்) விற்பனை செய்ததாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டு சுமார் ரூ.555 கோடி லாபம் அடைந்ததாகவும் எஸ்.இ.சி., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதம்:

இந்நிலையில் எம்ப்ரேயர் நிறுவனத்துக்கு 205.5 மில்லியன் டாலர் அபராதத்தை எஸ்.இ.சி., விதித்தது. இந்த அபராதத் தொகையை செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக எஸ்.இ.சி. தெரிவித்துள்ளது.

எம்பயர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், இந்தியாவில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...