நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கக்கோரி- மனு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் சரிவர விநியோகம் செய்யக்கோரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து பருப்பு, பாமாயில், சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்தில் எந்தத் தேதியிலும் கேட்டாலும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய வேண்டும். என்று நாளிதழ்களிலும் மற்றும் ஊடகங்களில் தவறாமல் வெளிவருகிறது. ஆனால் நியாய விலைப்பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திற்கு புகார்கள் வந்துள்ளது. 

இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தலைவர் கல்யாணசுந்தரம் பேசுகையில்:-
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் 5 கட்டமாக நியாய விலைக்கடைகளில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்கான முறையான திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் அடையாள சான்றிதழாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் சரியான முறைகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் நியாய விலைக்கடைகள் அவ்வாறு சரியான முறையில் செயல்படுவதில்லை. இதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாவிட்டால், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு திருப்பி ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...