மலேசியா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: இந்தியர்கள் உள்பட 6 பேர் பலி

கோலாலம்பூர்: தெற்கு மலேசியாவில் உள்ள பொது மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலேசியாவின் ஜோகூர் பாரு என்ற பகுதியில் இயங்கி வரும் சுல்தானா அமீனா மருத்துவமனையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து மருத்துவமனை கட்டிடம் முழுவதும் மளமளவென பரவியது.

இந்த விபத்தில், 4 பெண்கள், இரண்டு ஆண்கள் என 6 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் இந்திய வம்சாவளியினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் 80 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தின் போது மருத்துவமனைக்குள் சிக்கிக்கொண்ட 294 நோயாளிகளும், 193 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...